தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாரா, தற்போது நடிகர் விஜய்யுடன் ’பிகில்’, நடிகர் ரஜினிகாந்தின் ’தர்பார்’ ஆகியப் படங்களில் படு பிஸியாக உள்ளார்.

இவற்றை முடித்து விட்டு, இயக்குநர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸின் முதல் தயாரிப்பு படத்தில் நடிக்கிறார். ‘நெற்றிக்கண்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை, ’அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்குகிறார்.

’நெற்றிக்கண்’ படத்தில் கண்பார்வையற்ற பெண்ணாக நடிக்கும் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக, மிலிசந்த் தெரிவித்துள்ளார். இதை வைத்துப் பார்க்கும் போது கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக இது இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் நெற்றிக்கண் படபிடிப்பு தளத்தில் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், ”திரும்பவும் ஒன்றாக படப்பிடிப்பை தொடங்குகிறோம். ஆனால் வித்தியாசமான ரோல்களில்” என்று குறிப்பிட்டுள்ளார்.